search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே விபத்து-17 பேர் படுகாயம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே விபத்து-17 பேர் படுகாயம்

    • கர்நாடகாவில் இருந்து 17 பேர் நீலகிரிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர்.
    • 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியார் பஸ் மீது வேன் மோதியது.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா மாநிலம் பெள்ளேரி பகுதியில் இருந்து 17 பேர் தனியார் சுற்றுலா வேன் மூலம் சுற்றுலாவிற்கு வந்தனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு கோத்தகிரி வழியாக திரும்பிக் கொண்டு இருந்த னர்.

    வாகனத்தை பெள்ளேரி பகுதியை சேர்ந்த விஸ்வா (20) என்பவர் ஓட்டினார். வாகனம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் விஸ்வா (20), வினோத் (35), உலியம்மா (50), வீரம்மா (30), வீரோவ் (13), ராம்சரன் (14), தேஜீ (11), பஸ்வராஜ் (12), பாப்பா (34), லட்சுமி (30), நாகவேந்திரா (30), நாகராஜ் (40), மனோஜ் (6), கலரம்மா (44), மகானி (12) உள்ளிட்ட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதிகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×