என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் விபத்தில் ஜூஸ் கடை தொழிலாளி பலி
- மகன் கண்முன்பே இறந்த பரிதாபம்
- மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கரும்புகடையை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 36). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது 13 வயது மகன் சாகலை அழைத்து கொண்டு மொபட்டில் உக்கடம்- ஆத்துப்பாலம் ரோட்டில் சென்றார்.
அப்போது அவரது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஷாஜகான் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதினார். 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஷாஜகானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஷாஜகானை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நியூ சித்தாபுதூர் நந்தகோபால் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கேரளா லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மணிகண்டன் வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கோவில்பாளையம் சேரயம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (47). இவர் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காளப்பட்டி-அரசூர் ரோட்டில் சென்றார்.
மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டினார். அப்போது வெள்ளானப்பட்டி அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரோம் நடந்து சென்ற நரேஷ் மஜித் என்பவர் மீது மோதியது.
இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்