கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை
Published on

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1600 படிக்கட்டுகள் கடந்து சென்று தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும்.

இந்த பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன மழையால் அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்துடன் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வழிப்பாதையின் வழியாக சிறு, சிறு மரத்துண்டுகள் மற்றும் சிறு பாறைகள் உருண்டு வந்து நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மற்றும் அங்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com