search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை இந்தியா வாரவிழா உறுதிமொழி ஏற்பு
    X

    தூய்மை இந்தியா வாரவிழா உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூய்மை இந்தியா வாரவிழா உறுதிமொழி ஏற்பு

    • மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அவைகளை பாதுகாக்க வேண்டும்.
    • முன்னதாக லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழா மற்றும் மரம் நடும் துவக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பட்டுக்கோ ட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான ஜெயராமன் தலைமை வகித்தார்.

    லயன் சங்கத் தலைவர் அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவே ற்றார். புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் சத்தியசுந்தரம் ஐ.பி.எ.ஸ். தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து பேசுகையில் :

    மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம். எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

    அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகா க்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

    அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பை களை அகற்றினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணை ப்பாளர்கள் ராமமூர்த்தி, சுப்பிரமணி, சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    முடிவில் பட்டுக்கோ ட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.

    Next Story
    ×