search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்-திரளான பக்தர்கள் தரிசனம்

    • இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு பூஜை

    இந்த திருவிழாவிற்காக காந்திமதி அம்பாள்-சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதன்பின் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி திருவிழாவின் 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதியும், முளை கட்டும் உற்சவம் வருகிற 21-ந் தேதியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×