என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையில் இன்று காலை மது போதை தகராறில் வாலிபர் அடித்துக்கொலை?-குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை
- செல்லத்துரை நேற்று மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
- இன்று காலை மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்தவர்களிடம் செல்லத்துரை தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
பாளை சமாதானபுரம் எம்.கே.பி.நகர் திருமலை தெருவை சேர்ந்தவர் சுடலை மணி. இவரது மகன் செல்லத்துரை (வயது24). பெயிண்டிங் தொழிலாளி.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு அவரது தாய் மற்றும் சகோதரிகளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மது போதை தகராறு
இந்நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை அவரது தாய் மற்றும் சகோதரிகள் தட்டிக் கேட்கவே அவர்களை அடித்து உதைத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை கண்டித்து அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் இன்று காலை மீண்டும் செல்லத்துரை மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்லத் துரை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பாளை போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதனால் அங்கு விரைந்து வந்த போலீசார் செல்லத்துரை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே செல்லத்துரையின் தாய் மற்றும் சகோதரிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அடித்து கொலை?
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லத்துரை அடித்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என போலீ சார் சந்தேகிக்கிறார்கள்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.






