என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் தோட்டத்தில் புகுந்து கோழிகள் திருடிய வாலிபர் கைது
- சம்பவத்தன்று மர்ம நபர்கள் தோட்டத்தில் புகுந்து கோழிகளை திருடிச்சென்றனர்.
- விசாரணையில் முத்தையாபுரம், ஜே.எஸ். நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கோழிகளை திருடி சென்றது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அத்திமரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 36). இவர் தனக்கு சொந்தமான 10 கோழிகளை அத்திமர பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் தோட்டத்தில் இருந்து கோழிகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். அதில் முத்தையாபுரம், ஜே.எஸ். நகரை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவர் ராஜ்குமாரின் தோட்டத் திற்குள் புகுந்து கோழிகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதனை யடுத்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர், சதீஷ் குமாரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட 10 கோழிகளில் 4 கோழிகளை பறிமுதல் செய்து விசா ரணை நடத்தி வருகின்றார். சதீஷ்குமார் மீது ஏற்கனவே முத்தையா புரம் போலீஸ் நிலையத்தில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்