search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த இளம்பெண்
    X

    வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த இளம்பெண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளை மீட்டு தரும்படி பெற்றோர் புகார்
    • நெகமம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவர் அந்த பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு பக்கத்து கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேலையை விட்டும் நிறுத்தினர்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர் தனது உறவினர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கோவையில் இருப்பதாகவும், காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடிய போது இளம்பெண் அவருடைய காதலனை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட தங்களது மகளை மீட்டு தரும்படி நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×