என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரவீன்.
திண்டிவனம் அருகே இளம் விவசாயி தூக்கு போட்டு தற்கொலை?போலீசார் தீவிர விசாரணை
- இளம் விவசாயி பிரவீன் (வயது 28). இவர் திண்டிவனம் பாஞ்சாலத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாய வேலைகளை பார்த்துவிட்டு அங்கேயே தங்குவது வழக்கம்.
- இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், பிரவீன் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி பகுதியை சேர்ந்த இளம் விவசாயி பிரவீன் (வயது 28). இவர் திண்டிவனம் பாஞ்சாலத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாய வேலைகளை பார்த்துவிட்டு அங்கேயே தங்குவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், பிரவீன் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரவீனின் உறவினர்களுக்கும், ரோசனை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரவீன் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் அல்லது யாரேனும் இவரை அடித்து கொலை செய்தார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரவீனுக்கு திருமணமாகி 10 மாத ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.






