என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் இருந்த  பெண்  மாயம்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் இருந்த பெண் மாயம்

    • சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார்.
    • சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆம்பூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 27) இவர்கள் இருவருக்கும் 8 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகன் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று விவசாய கூலி வேலைக்காக சண்முகம் வீட்டிலிருந்து சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த மனைவி மஞ்சுளாவை காணவில்லை.

    உடனே சண்முகம் மனைவி மஞ்சுளாவை உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் மஞ்சுளா கிடைக்கவில்லை. இது குறித்து சண்முகம் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மஞ்சுளா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×