என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்
- ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த 30 வயது இளம்பெண் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்
- கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். சத்துணவு ஊழியர். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு ராக்கிப்பா ளையத்தை சேர்ந்த வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்ப ட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது . கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம்பெண் தனது மகன், மகள் ஆகியோரை பள்ளியில் விட செல்வதாக கணவரிடம் கூறி விட்டு மொபட்டை எடுத்து சென்றார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். 2 குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் இளம்பெண்ணின் கணவர் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ்நிலையத்தில் தன்னை தனியாக தவிக்க விட்டு 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தரும்படி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.






