search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே பெண்ணிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்
    X

    பரமத்திவேலூர் அருகே பெண்ணிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல்

    • கொளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 54). சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு செல்லம்மாள் நின்று கொண்டிருந்தார்.
    • செல்லம்மாள் அவர்களை பார்த்து, வாகனத்தில் நிதானமாக வரக்கூடாதா‌ என கேட்டுள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் செல்லம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்ட மங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 54). சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு செல்லம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக போதையில் மொபட்டில் வந்த 3 நபர்கள், நிலைதடுமாறி செல்லம்மாள் வீட்டிற்கு முன்பு கீழே விழுந்துள்ளனர்.

    அப்போது செல்லம்மாள் அவர்களை பார்த்து, வாகனத்தில் நிதானமாக வரக்கூடாதா என கேட்டுள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் செல்லம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.

    இந்த வாய்த்தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 3 பேரும் செல்லம்மாளின் தலைமுடியை பிடித்து அறுக்க முயன்றனர். மேலும் செல்லம்மாளின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, 3 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை யில், தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கொந்தளத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கொந்தளம் அருகே பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் அருண்குமார் (20), கொந்தளம் வெங்க மேட்டுப்புதூரை சேர்ந்த அய்யப்பன் மகன் சரவணன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×