search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை
    X

    கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை

    • மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது.
    • குடியிருப்புகளை முற்றுகையிட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சாலையில் உலா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் குஞ்சப்பனை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. அத்துடன் அடிக்கடி சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் நின்றன. குறுகிய வளைவில் யானைகள் நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் யானைகளை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். சாலையில் யானைகளை கண்டால் தொல்லை அளிக்கவோ அல்லது அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது. ஒலிப்பான்களை ஒலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். வாழை மரங்கள் சேதம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதிக்குள் இரவு காட்டு யானை புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. கனகராஜ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இரு்நத வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் மூலைக்கடை பகுதியில் வர்க்கீஸ் என்பவரது வீட்டின் நுழைவுவாயிலை காட்டு யானை உடைத்து, வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு வாழை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை தாக்க முயன்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்ைட தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டினர். இதையடுத்து மூலைக்கடையில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×