search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைத்தோட்டம் பகுதியில் குடியிருப்பையொட்டி சுற்றி திரியும் காட்டு யானை
    X

    வாழைத்தோட்டம் பகுதியில் குடியிருப்பையொட்டி சுற்றி திரியும் காட்டு யானை

    • யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட மக்கள் கோரிக்கை
    • கூலி வேலைக்கு சென்ற பெண்ணை தாக்கிக் கொன்றது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற மங்கலி என்ற பெண்ணை தாக்கிக் கொன்றது. அதனைத் தொடா்ந்து வாழைத்தோட்டம் கிராமத்தையொட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

    இந்த யானை தொடா்ந்து கிராமப் பகுதிகளை ஒட்டியே சுற்றித் திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். சாலையில் செல்லும் வாகனங்களையும் இந்த யானை துரத்துவதால் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக யானை நடமாட்டம் காணப்படுகிறது. யானை தொடர்ந்து குடியிருப்பையொட்டி சுற்றுவதால் நாங்கள் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×