என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
- விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
- மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மேலம்பெரும்பள்ளம், தலச்சங்காடு, மருதம்பள்ளம், காளியப்பன் நல்லூர், அம்மன் ஆற்றுப்படுகை உள்ளிட்ட கிராமத்தை சுற்றி விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.பி.எம். ஒன்றிய செயலாளர்கள் மார்க்ஸ், ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுதாமன், ஒன்றிய துணை தலைவர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டியும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அரசு அறிவித்தும் விவசாயநிலங்களில் மணல் குவாரி அமைப்பதை தடுக்ககோரியும், மணல் குவாரிகளை மூடகோரியும் முழக்கமிட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்