search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் தடுப்பு சுவரில் சிக்னல் இல்லாததால் லாரி மோதி விபத்து
    X

    கடையநல்லூரில் தடுப்பு சுவரில் சிக்னல் இல்லாததால் லாரி மோதி விபத்து

    • லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.

    கடையநல்லூர்:

    சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால் டேங்கர் லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

    இதனால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தடுப்பு சுவரில் சிக்னல் அமைக்காததால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×