search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே வியாபாரியை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு
    X

    பண்ருட்டி அருகே வியாபாரியை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு

    • ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.
    • 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நரியன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் தேவநாதன் (36)கமிஷனுக்கு முந்திரி கொட்டை வாங்கி உடைத்து முந்திரி பயிர் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்காடாம்புலியூர் என்.வி.கேஷ்யூஸ் கம்பெனி உரிமையாளர்களான சண்முகம்,கார்த்தி ஆகியோரிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான முந்திரி கொட்டைகளை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையை 1 ஆண்டு காலமாக தராமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவநாதன்,வீரசிங்கண் குப்பத்தை சேர்ந்த ஞானசேகர் என்பவரிடம் 496 கிலோ முந்திரிப் பயிரை விற்பனைக்காக கொண்டு வந்து கொடுத்தபோது எதிரிகள் பின் தொடர்ந்து வந்து தேவநாதனை தாக்கி அவர்கள் கொண்டு வந்த வாகனத்தில் தேவநாதனையும் முந்திரி பயிரையும் ஏற்றிக்கொண்டு காடாம்புலியூர் கம்பெனிக்கு கொண்டு சென்று முந்திரி பயிரை பிடுங்கிக் கொண்டு தேவநாதனை தாக்கினர்.மேலும் அவரது தம்பி தேவேந்திரனை வரவழைத்து அவரையும் தாக்கி அவரிடம் இந்த செல்போன் 4 பவுன் தங்க நகைகளை பிடுங்கிக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்துகாடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்ராஜா தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×