search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து
    X

    கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

    • ரவிக்குமார் என்பவர் டிராக்டரை ஓட்டிக் கொண்டுவரும்போது, சர்வீஸ் சாலையில் டிராக்டரை திரும்ப முயன்றார்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் கவிழ்ந்தது.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் லிங்காரெட்டிபாளையத்திலிருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் படாளத்திற்கு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. டிராக்டரை புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டை சேர்ந்த ரவிக்குமார் ஓட்டி சென்றார். அப்போது திண்டிவனம் புறவழிச்சாலை ஆர்யாஸ் உணவகம் அருகே வரும்போது டிரைவர் ரவிக்குமார் சர்வீஸ் சாலையில் டிராக்டரை திரும்ப முயன்றார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த கரும்புகள் ரோடு முழுவதும் சிதறியது. இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவலறிந்து விரைந்த வந்த திண்டிவனம் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ரோந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×