search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தூங்கிய பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    வீட்டில் தூங்கிய பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

    • அதே பகுதியில் உள்ள பெண் ஒருவர் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் அடுத்து கடகம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்அதே பகுதியில் உள்ள 30 வயதுடைய பெண் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார் அப்போது ரமேஷ்குமார் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார்.

    அப்போது அலறியடித்த வெளியே அவர் ஓடி வந்துவிட்டார். சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×