என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
16 வயது சிறுமியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் திடீர் தற்கொலை
- சேலம் பள்ளப்பட்டியில் பரபரப்பு 16 வயது சிறுமியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் திடீர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் புகார்
சேலம்:
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் இன்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன், அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு மிரட்டியதாகவும் இது தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் தலைமறைவான மணிகண்டன், செல்போனிலும் அந்த சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணிகண்டன் இன்று தற்கொலை செய்து ெகாண்டார்.
ஆனால் மணிகண்டனின் உறவினர் போலீசார் அவரை தாக்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதனால் ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் திரண்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்