search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16 வயது சிறுமியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் திடீர் தற்கொலை
    X

    16 வயது சிறுமியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் திடீர் தற்கொலை

    • சேலம் பள்ளப்பட்டியில் பரபரப்பு 16 வயது சிறுமியை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் திடீர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் புகார்

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் இன்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன், அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு மிரட்டியதாகவும் இது தொடர்பாக சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தார். இதனால் தலைமறைவான மணிகண்டன், செல்போனிலும் அந்த சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணிகண்டன் இன்று தற்கொலை செய்து ெகாண்டார்.

    ஆனால் மணிகண்டனின் உறவினர் போலீசார் அவரை தாக்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். இதனால் ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் திரண்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×