என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி வாலிபர் பலி
- ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்
- திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பழையூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29) தனியார் பஸ் டிரைவர். இவர் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கி ருந்து ஊருக்கு புறப்பட்டார். வடபொன்பரப்பி அடுத்த புதூர் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வளைவு பகுதி யில் வந்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ரமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீ சார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி னர். பின்னர் விபத்தில் பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






