என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர்
    X

    மேட்டுப்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர்

    • வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றார்.
    • மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஊட்டியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவி தனது காதலனை சந்திக்க சென்றார்.

    அப்போது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அவரது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அவரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக அவர்கள் கூறினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×