என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு இறந்த விஜயின் உடலை பார்வையிட்ட போலீசார்.
தஞ்சையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்க்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 25 ). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வந்த ரெயில் விஜய் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






