search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் நின்ற லாரியில் மோதி வாலிபர் பலி, ஓருவர் கவலைக்கிடம்,,
    X

    சாலை விபத்தில் பலியான அம்பேத்கார்.

    சாலையோரம் நின்ற லாரியில் மோதி வாலிபர் பலி, ஓருவர் கவலைக்கிடம்,,

    • இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.
    • சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார்

    கடலூர்:

    வேப்பூர் அருகே அவ்வதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அம்பேத்கார் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சவுந்திரபாண்டியன் (27). இருவரும் அப்பகுதியில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் 3-ம் நாளான காணும் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.

    அப்போது வேப்பூர் கூட்ரோடு சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். இத்தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் போலீசார் பலத்த காயமடைந்த சவுந்திரபாண்டியனை சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அம்பேத்காரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×