என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு தொடர் ஓட்டப்பந்தயம்
- தொடர் ஓட்டப்பந்தயத்தை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும்
கோவை,
கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான 48 நாள்- 2 கி.மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காலை, மாலை என்று பாராமல் நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். இவ்வாறு 21 அல்லது 48 நாட்கள் தொடர்ச்சியாக ஓட்டப்பயிற்சி செய்து வந்தால் இது அவர்களின் தினசரி வாழ்வில் ஒரு பழக்கமாகவே மாறி விடும்.
இதனால் போலீசாருக்கு மனஅழுத்தம் குறைந்து, உடல் நலமும் மேம்படும் என்று கூறினார். கோவை ஆயுதப்படை மைதானத்தில் ஓட்டப்பந்தயப் போட்டியில் முதற்கட்டமாக 1000 போலீசார் பங்கேற்க முன்வந்து உள்ளனர்.
Next Story






