search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவர்
    X

    பொள்ளாச்சியில் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவர்

    • 15 வயது மாணவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவரை அவரது தாய் செல்போன் பயன்படுத்த கூடாது என திட்டி உள்ளார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்த 15 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவர் பள்ளிக்கு செல்லும் போது அவரது தாய் நன்றாக படிக்க வேண்டும். செல்போன் பயன்படுத்த கூடாது என திட்டி உள்ளார். இதனால் மாணவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவர் அந்த பகுதியில் கடைக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்காக சாம்புவை வாங்கினார். பின்னர் அதனை குடித்தார். பள்ளி அருகே சென்ற போது வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாணவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×