என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் கர்ப்பிணி பெண் திடீர் சாவு
- இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.
- நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மோனிஷா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் இரண்டு வயதில் வர்ஷினி என்கிற பெண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.
நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மோனிஷாவை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடத்தில் மோனிஷா இறந்த காரணத்தினால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்