search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  திருமணமாகி 3 வருடத்தில் கர்ப்பிணி பெண் திடீர் சாவு
    X

    கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் கர்ப்பிணி பெண் திடீர் சாவு

    • இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லி சேர்ந்தவர் ஜோசப்‌‌. இவரது மனைவி மோனிஷா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆன நிலையில் இரண்டு வயதில் வர்ஷினி என்கிற பெண் குழந்தை உள்ளது. தற்போது மோனிஷா மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் மோனிஷாவுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை பாதிப்பு இருந்து வந்தது.

    நேற்று நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மோனிஷாவை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடத்தில் மோனிஷா இறந்த காரணத்தினால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்.

    Next Story
    ×