search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
    X

    நெல்லை டவுனில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

    • சங்கரநாராயணன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்திருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 43). இவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

    இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இருச்சக்கர வாகனம் முழுதும் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் தீவைத்திருப்பதை அறிந்த அவர் இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×