search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாங்குளம் ரெயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்
    X

    வாலாங்குளம் ரெயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்

    • ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
    • இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை

    கோவை,

    கோவை வாலாங்குளம் ரெயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை - கேரளா செல்லும் ரெயில்வே தண்டவாளம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அழுகிய நிலையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×