என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தண்டவாள பகுதியில் மணி பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.
ஆத்தூர் அருகே ரெயில் மோதி கூலித் தொழிலாளி பலி
- மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
- எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மணி காலைக் கடனை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது. இதில் ரெயிலில் சிக்கிய மணி, அரை கிலோ மீட்டர் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






