என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட குதிரை.
பள்ளத்தில் விழுந்த குதிரை உயிருடன் மீட்பு
- பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
- குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ–ட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலை–யில் விழுந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் அடிபட்டு கிடந்த குதிரையை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் தகவலின் பேரில் கால்நடை டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் அங்கு வந்த கால்நடை மருத்துவ குழுவினர், குதிரைக்கு மரு–த்துவ சிகிச்சை அளித்தனர்.
Next Story






