என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்லியார் அருகே குன்னூர் ரோட்டில் குட்டியுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டம்
- பர்லியாறு பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன.
- சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்க கூடாது என எச்சரிக்கை.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், பர்லியாறு பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளன. அவை தற்போது குன்னூா் அடுத்த ரன்னிமேடு ெரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி உலா வந்து செல்கிறது.
குன்னூர் ரோட்டில் சுற்றி திரியும் காட்டு யானைகளின் நடமாட்டம், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்ஒருபகுதியாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் கூறுகையில், யானைகள் அவ்வப்போது சாலையில் உலாவுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயற்சிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






