என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து
- சேந்தமங்கலம் ரோடு, செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
- இங்கு சாம்பிராணி தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பஞ்சாயத்து, கூச்சிக்கல் புதூரை சேர்ந்தவர் கவுதம். இவர் சேந்தமங்கலம் ரோடு, செல்லப்பா காலனி பகுதியில் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் இங்கு சாம்பிராணி தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார். இரவு பணி முடிவடைந்து, தொழிற்கூடத்தை அவர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று விடுமுறையானதால், தொழிற் கூடத்தை திறக்கவில்லை.
இந்த நிலையில் மதியம் அவரது தொழிற் கூடத்தில் தீப்பிடித்து புகை கிளம்பியது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் இது குறித்து, நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்கூடத்தில் இருந்து எந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழிற்கூட்டத்தில் ஏற்பட்ட, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






