என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணித்த வாலிபருக்கு ரூ.200 அபராதம்
- டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார்.
- டேவிட் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார்.
நெல்லை:
ஆலங்குளத்தை சேர்ந்தவர் டேவிட்(வயது 36). இவர் நேற்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலமாக இயக்கப்படும் சிவப்பு நிற பஸ்சில் சந்திப்பு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய டேவிட்டிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். உடனே அவர் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார். ஆனால் பையில் டிக்கெட்டை காணவில்லை.
உடனே பரிசோதகர் அபராதம் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் டேவிட், தான் டிக்கெட் எடுத்ததாகவும் சில நிமிடங்கள் பொறுங்கள். எனது பையில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த பரிசோதகர் ரூ.200 அபராதமாக விதித்து ள்ளார். அபராத சீட்டு எழுதி முடித்ததும், டேவிட் தேடிய டிக்கெட் அவரது கைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
உடனே அவர் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்டி உள்ளார். ஆனால் அபராதம் விதித்தபின் மாற்ற முடியாது என்று அலட்சியமாக கூறிவிட்டு பரிசோதகர் சென்றுவிட்டார் எனவும், பரிசோதகரின் பொறுமையின்மையால் ரூ.15 டிக்கெட்டுக்கு ரூ.200 அபராதமாக செலுத்தி உள்ளேன் எனவும் டேவிட் வருத்தத்துடன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்