search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரம்பாடியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண் காட்டு யானை
    X

    சேரம்பாடியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண் காட்டு யானை

    • கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

    ஊட்டி

    கேரள வன பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம், கூடலூா் வன கோட்டத்தில் உள்ள சேரம்பாடி வனசரகம் வென்ட்வொா்த் எஸ்டேட், கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது.

    இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். கால்நடை டாக்டர் தொடர்ந்து யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் குணமாகவே அந்த யானை மீண்டும் கேரள வனப் பகுதிக்குள் சென்றது.

    பின்னா் மீண்டும் உடல்நிலை மோசமடைந்த யானை சேரம்பாடி வனச் சரக பகுதிக்கு வந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனா். இதன் முடிவுகள் வந்த பிறகே யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

    Next Story
    ×