என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
- அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அ.தி.மு.க பிரமுகர் தத்து எடுத்தார்.
- இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக அவரும், அவரது வீட்டில் குடியிருக்கும் மற்றொருவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொந்தரவு தந்தனர்.
சேலம்:
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இன்று ஒரு சிறுமி தனது மாமாவுடன் வந்தார். கமிசனரிடம் மனு கொடுத்த பின்னர் சிறுமி கூறியதாவது:-
நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை அ.தி.மு.க பிரமுகர் தத்து எடுத்தார். தத்து எடுத்த நாள் முதல் சரிவர உணவு வழங்காமல், அவ்வப்போது திட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக அவரும், அவரது வீட்டில் குடியிருக்கும் மற்றொருவரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசி, பாலியல் தொந்தரவு தந்தனர்.
இது குறித்து தாய் கேட்க சென்றாள், தாயையும் மிரட்டுகின்றனர். இதையடுத்து வளர்ப்பு தந்தை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வரும் வேளையில், எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்திவிட்டு பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் படிக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து நான் வசிப்பதற்கும், படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள தாகவும் கூறினார்.






