என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சாவு
- சுப்பிரமணியன் பாளையங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழே பூவாணி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் சுப்பிரமணியன் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீவலப்பேரி மருகால்தலை அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






