search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இலந்தைமுள் படுக்கையில் படுத்து வழிபட்ட பக்தர்
    X

    கோவையில் இலந்தைமுள் படுக்கையில் படுத்து வழிபட்ட பக்தர்

    • உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகத்தில் அதிசயம்
    • 45-வது நாளில் வடமாநில சாமியார்கள் பங்கேற்பு

    சூலூர்,

    சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் ஜெய்ஹிந்த் பாரத பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தின் ஒரு பகுதியாக தென்னம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்ற பக்தர் இலந்தை முள் படுக்கையில் தினமும் ஒரு மணி நேரம் படுத்து யாகத்தினை நடத்தி வருகிறார்.

    விழாவின் நிறைவில் பசு, குதிரை ஆகியவை யாக குண்டத்தினை வலம் வர மேள, தாளங்களுடன் பூர்ணாகுதி நடைபெற்றது. 45-வது நாளில் வட நாட்டில் இருந்து சாமியார்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த யாகத்தின் மூலம் எதிரிகள் அழிந்து உலக மக்கள் நலமுடன் வாழ்வர் என தெரிவிக்கப்பட்டது. இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×