search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை மேடாக காட்சி அளிக்கும் சிறுவர் பூங்கா
    X

    குப்பை மேடாக காட்சி அளிக்கும் சிறுவர் பூங்கா

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோட்டில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது.

    தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம். மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடப்பது அங்கு வரும் பொது மக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள் காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது. ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியிலாக காட்சியளிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர்.குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசு

    Next Story
    ×