search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை பராமரிக்காத மகன்கள் மீது வழக்கு பதிவு
    X

    தந்தையை பராமரிக்காத மகன்கள் மீது வழக்கு பதிவு

    • 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 80) இவர் தனது மகன்களான ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இந்நிலையில் மற்ற 2 மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று ராயர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்களை அவரது மகன் லோகநாதன் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் தந்தையை முறையாக பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தை வீட்டில் இருந்து பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை கைது செய்தனர்.

    Next Story
    ×