search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறிது தூரத்திலேயே உடைந்த தேர் தடி- அதிகாரிகள் மீது பக்தர்கள் புகார்
    X

    உடைந்த தேர் தடியை படத்தில் காணலாம்.

    சிறிது தூரத்திலேயே உடைந்த தேர் தடி- அதிகாரிகள் மீது பக்தர்கள் புகார்

    • நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
    • இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

    ஆனாலும் ஒருசில இடங்களில் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர். தேர் புறப்பட்ட 20 அடி தூரம் வரை மொத்தத்தில் 2 தடி தான் போடப்பட்டது. ஆனால் அதற்குள் தேர் தடி உடைந்தது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது. கீழரதவீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகே தேர் நின்றது. உடனே அவசரம் அவசரமாக தேர் தடி தயார் செய்யும் பணிகளில் கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஏராளமான பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதே போலநெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். உடனே கம்பத்தை தீயணைப்பு துறையினர் நவீன எந்திரம் மூலமாக அறுத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தேரோட்டம் தாமதமானது.

    Next Story
    ×