என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாணாபுரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய சிறுவன்:பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான்.
- மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஷர்மிளா (வயது 21). இவர் சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் சத்தம் கேட்டு ஷர்மிளா உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரம் பணம், மோதி ரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டி ருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அந்த நபர் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், வீடு புகுந்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து திருடிய நகை, பணத்தை பறிமுதல் செய்த னர். மேலும் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்