search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடியில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
    X

    பணகுடியில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

    • பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை அடுத்த அழகிய நம்பி புரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வெண்சுபா. இவர்களுக்கு ஹரிஷ் இசை ரக்ஷன் (வயது5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவன் ஹரிஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தினமும் வீட்டின் பின்புறம் உள்ள மாடி படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி விளையாடுவது வழக்கம். இன்றும் விடுமுறையையொட்டி காலையில் சிறுவன் ஹரிஷ் மாடி படிக்கட்டில் ஏறி நின்று விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து சிறுவன் தவறி கீழே விழுந்தான். இதில் மயக்க மடைந்த ஹரிசை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது பெற்றோர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×