search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி
    X

    கராத்தே பயிற்சி முடித்தவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி

    • பல்வேறு நிலைகளை கற்றுத்தேர்ந்த மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
    • மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டி னம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் சாய் காய் டூ அட்வ ர்ஷர் அகாடமியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை அகில இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டரும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான சாய் புருஸ் தொடக்கி வைத்தார்.

    போட்டியில் கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    அதை தொடர்ந்து பல்வேறு நிலைகளை முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிளாக் பெல்ட் பெற்ற பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியினை நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான சென்சாய் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக தாமஸ் ஆல்வா எடிசன் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டார்.

    இதில் ஆசியன் கராத்தே நடுவர் அறிவழகன், மரிய சார்லஸ், டாக்டர் உமா, மார்ட்டின் பாக்யராஜ், இளம்பரிதி, பூமாலை, சென்சை அன்பழகன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வினை தலைமை ஆசிரியர் ஆறு துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×