search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகள் அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி
    X

    கூடைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    பள்ளி மாணவிகள் அணிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி

    • 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • வருகிற 6-ந் தேதி வரை மின்னொலி கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    கேலோ இந்தியா, கூடைப்பந்து பெடரேஷன் ஆஃப் இந்தியா , தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான அஸ்மிதா இந்தியன் உமன் லீக் கூடைப்பந்து போட்டி நேற்று மாலை தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ். ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் கதிரவன், பொருளாளர் சதீஷ் ஆனந்த் , துணைத் தலைவர்கள் ஜவஹர் பாபு, டாக்டர் நியூட்டன், சந்தோஷ் குமார், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணி வீராங்கனைகள் தர்ஷினி, பார்த்திபாப்ரியா, மோனிகா ஜெயசீலி, கிருஷ்மிகா, நடுவர் பச்சைய ப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் வரவேற்றார்.

    இதில் தஞ்சை ,கும்பகோணம், பட்டுக்கோட்டையில் இருந்து தலா 2 பெண்கள் அணிகள் வீதம் 6 அணிகள் கலந்து கொண்டனர். 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    முதல் போட்டியில் தஞ்சை தூய வளனார் பள்ளி அணியும், பட்டுக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதினர். போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 6-ம் தேதி வரை மின்னொலி கூடை பந்து போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு ,கோப்பைகள் வழங்கப்படும்.

    இந்நிகழ்வில் இணை செயலாளர்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜூ ரமேஷ் குமார், மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் பாபு, மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்வாணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்த், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தூய இதய மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    தொடர்ந்து இன்றும் கூடைபந்து போட்டி நடைபெறும்.

    Next Story
    ×