என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி 7 வயது சிறுவன் பலி
- நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபால ராயபுரம் அருகே உள்ள சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. மீனவர். இவரது மகன் டிக்சன்(வயது 7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் இரவில் வீடு திரும்பினர். அவர்கள் தெற்கு கடற்கரை சாலை இனிகோ நகர் பகுதியில் வந்த போது தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கி ளில் பின்னால் மோதியது.
இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த வர்க ளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல் லும் வழியி லேயே டிக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரோக்கிய சாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து ரித்திசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






