search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு
    X

    தொண்டாமுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு

    • ஜெயராஜ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
    • மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது.

    இதை பார்த்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து பார்த்தனர். அப்போது, மலைப்பாம்பு, ஜெயராஜ் வீட்டில் வளர்த்து வந்த கோழியை விழுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அட்டுக்கல் மலைப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

    Next Story
    ×