search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை அருகே திருமணம் ஆகாத வாலிபருடன் ஓட்டம் பிடித்த 42 வயது பெண்
    X

    ஆனைமலை அருகே திருமணம் ஆகாத வாலிபருடன் ஓட்டம் பிடித்த 42 வயது பெண்

    • மகளுக்கும் திருமணமாகி பாட்டி ஆனவர் 30 வயது வாலிபருடன் கள்ளக்காதல்
    • கணவருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் 42 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

    இந்தநிலையில் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த திருமண மாகாத 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமை யில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். பெண் அடிக்கடி அவரது கள்ளக்காதலனுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணின் கணவர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திரும ணமாகாத வாலிபருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    மாயமான பெண்ணின் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்தநிலையில் அந்த பெண், வாலிபர் ஒருவருடன் ஓட்டம் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×