search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
    X

    12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவைகுண்டம் தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

    • ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது.
    • வனத்துறை அதிகாரிகள் தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள நத்தம் பகுதியில் பிரபு பாண்டியன் என்பவரது தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பு புகுந்தது. விவசாயிகளான பேரூர் முத்துராமலிங்கம், வசவபுரம் முத்து, கார்த்திக், சவுந்தர்பாண்டி, சங்கர் ஆகியோர் மலைபாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் வன சரகர் பிருந்தா உத்தரவின்பேரில், வனத்துறை அதிகாரிகள் வெள்ளபாண்டி, கந்தசாமி, காசிராஜன் ஆகியோர் தோட்டத்தில் பிடிபட்ட மலைபாம்பை வல்லநாடு மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    Next Story
    ×