search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரி மாணவர்களின் 8 செல்போன்கள் திருட்டு
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரி மாணவர்களின் 8 செல்போன்கள் திருட்டு

    • இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதியியல் மற்றும் கணிதவியல் துறை மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டு இருந்தனர். அவர்கள் வராண்டாவில் தங்களது பையில் 8 செல்போன்களை வைத்து சென்றனர். தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×